Sunday, February 15, 2009

Dhoorathil Irundhu Naan Paarkiren

தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன்
ஐந்து பெண்கள் வேகமாக ஓடுகிறார்கள்
இல்லை பெண்கள் இல்லை சிறுமிகள் , ஆனால் எங்கே ஓடுகிறார்கள் ?

தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன்
அவர்களுக்குள் ஏதோ போட்டி போலிருக்கும், ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு ஓடுகிறார்கள்
தூரத்தில் இருந்து நான் பார்க்கிறேன்
ஆனந்தமாக சிரித்துக்கொண்டே ஓடுகிறார்கள்
ஒரே சமையத்தில் எல்லோரும் கீழே விழுந்து மீண்டும் எழுந்து ஓடுகிறார்கள்

அவர்கள் ஏனோ காதை மூடிக்கொண்டு ஓடுகிறாகள்

சற்று அருகில் இருந்து பார்க்கிறேன்
அவர்களை யாரோ துரத்துவது தெரிகிறது
சிரித்த உதடுகள் என்று நினைத்த எனக்கு அதிர்ச்சி
அவர்களின் கண்களில் பீதி
அவர்கள் விளையாடவில்லை

மீண்டும் அருகில் சென்று பார்க்கிறேன்
அவர்களை சுற்றிலும் வெடிகுண்டுகள் சிதறுகின்றன
குண்டுகளிடம் இறையாகா வேண்டி ஓடுகிறார்கள்
தமிழர்களின் பிணங்களுக்கு மேல் கோபுரம் கட்ட துடிக்கும் வெறியர்களின் குண்டுகளுக்கு
இறையாகக்கூடாதென்று ஓடுகிறார்கள்

வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியவர்கள், இதோ குண்டுகளைத் தாண்டி ஓடுகிறார்கள்
புழுதிக் காற்று அவர்களை மறைத்து விட்டது

மீண்டும் தலைப்பச் செய்திகள் வாசிக்கப்பட்டது .....
என்ன ஆனதோ அவர்களுக்கு ?
தூரத்தில் இருந்து நான் பார்த்துக்கொண்டு மட்டும் தான் இருக்கிறேன்

2 comments:

Mathuram Nallathambi CUA said...

yenna solrathuney theriyala di. I can feel your emotion in the kavidhai. Touchy.

Unknown said...

Good writing. Nee, arugil poi paarthuttu yen kadaisila dhoorathil irundhu paarkirennu mudichirukka? Did you want to express that you are unable to do anything about it?